Tuesday, May 3, 2011

கல்யாணத்திற்கு பின் நண்பர்களுக்குள் பிரிவு ஏன்?



ஒரு சிறிய அலசல்.

ஆம் நண்பர்களே, இது ஒரு விவாதிக்க கூடிய, பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான நிகழ்வு தான். முதலில் நண்பர்கள் - யார் இவர்கள்? எப்படி அனைவரது வாழ்விலும் ஒரு தவிர்க்க முடியாத சொந்தமாக இருக்கிறார்கள்.
நட்பு என்றால் உயிரையும் கொடுப்பேன் என்று சொல்லும் அளவுக்கு என்னதான் இருக்கிறது? ரத்தசொந்தத்தை விட அவ்வளவு மேலோங்கிய விஷயமா இந்த நட்பு என்பது? இப்படி பல பல கேள்விகள் நம்முள் எழுந்துக்கொண்டே இருந்து தான் வருகிறது... சரி பார்ப்போம்.

நண்பன் :-

"டேய் ஷங்கர் பென்சில் கொண்டு வரல டா, உன் கிட்ட இருக்கா" - இப்படி ஒன்றாம் வகுப்பில் அறிமுகம் ஆகும் நண்பன்,

"டேய் ஷங்கர், பொண்ணுக்கு எப்படியோ கல்யாணத்த முடிச்சிட்டேன். பையனுக்கும் இந்த வருஷம் முடிச்சிட்டா, என்னோட கடமை முடியும்டா" - இப்படி இறுதி நாட்கள் வரை தொடரும் ஒரு உன்னதமான உறவு தான் நண்பன்.
இந்த இரண்டு காலக்கட்டத்திற்குள் எத்தனை எத்தனை பாசம், நேசம், பரிவு, பிரிவு, சண்டை, கோபம், காதல் கலந்துரையாடல், ஐயோ சொல்லிக்கொண்டே போகலாம் நாம் அனைவரும் அனுபவித்த ஆராயந்துப்பார்க்க முடியாத விஷயங்கள்(சந்தோஷங்கள்).

ஆம், அனைவரது வாழ்விலும் நிச்சயம் உங்கள் சோகத்தில் முழுமையாக பங்குப்பெற்றவன் நண்பனாகவே இருப்பான்.  அப்படி பட்ட நண்பன் என்பவன் எப்படி சிறிது காலம் தனிமை படுத்தப்படுகிறான். அந்த தனிமையால் எப்படி இன்னொருவன்(இவனும் நண்பனே) தவிக்கிறான். இதுவும் ஒரு இயல்பாக நிகழும் காலத்தின் மாற்றமே. 
இதற்க்கு காரணக்கர்தா ஒன்றே ஒன்று தான்.

காதலும் கல்யாணமும் :-

பெண் - இவர்களுக்கு இப்படி ஒரு சக்தியா என்று நினைக்க தோன்றுகிறது அல்லவா. இப்படி பட்ட உறவை கூட இவர்கள் நினைத்தால் கண்டிப்பாக தவுடு பொடியாய் ஆக்கிவிடலாம் என்று. 

ஆண் - இவன் நிச்சயம் ஒரு கோமாளி ஆக்கப்படுகிறான் காதல் என்னும் கரையை கடக்கும் பொழுது. இல்லை என்று சொல்வோர், கண்டிப்பாக பொய் அதிகம் பேசுபவர்களாக இருக்க கூடும். எனக்கு தெரிந்து நண்பர்கள் பகிர்ந்து கொள்ளாத விஷயங்கள் என்றால் முதலில் வந்து நிற்பது "ஒரு பெண்ணுடன் பழகும் பொழுது தான்", காதல் என்று வந்தால் சுத்தம் கண்டிப்பாக மறைக்கப்படும்.
இது அவர்களின் தவுறு இல்லை, அறியாமை தான் எங்கே இவளை பற்றி, நம் நண்பர்கள் ஏதாவது சொல்லி விடுவார்களோ? எதுக்கு டா இந்த காதல் கத்திரிக்காய் என்று எல்லாம் கேலி செய்வார்களோ என்று ஒரு பயம்? இப்படி பல பல சிந்தனைக்குள் தள்ள படுகிறான், பின்பு அதுவே மறைக்கப்படுவதற்கு முதல் படியாய் நின்று விடுகிறது.
ஆனால் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்த மறைக்கப்பட்ட காதலுக்கும், காதலிக்கும் எதாவது பிரிச்சனை என்றால் இவன் முதலில் நாடுவது நண்பர்களை தான். இப்ப மட்டும் எப்படி தான் நண்பர்கள் கண்ணுக்கு தெரிவாங்களோ?  அது போகட்டும், இந்த காதலை கல்யாணம் என்று அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் போது தான், இந்த நண்பர்கள் கூட்டம் உள்ளே வரும். வந்த பிறகு ஒரு வழியாக எப்படியோ பெற்றவர்களின் சம்மதத்தோடோ, இல்ல அவர்களை எதிர்த்தோ, இல்லை அவர்களின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தியோ கல்யாணம் நடந்து முடிகிறது. 

இனி தான் நம் தலைப்பின் கருவுக்குள் வந்திருக்கிறோம், ஆம் கல்யாணத்திற்கு பின் நண்பர்கள் ஏன் பிரிகிறார்கள்??? இந்த கேள்விக்கான விடை இங்கே தான் இருக்கிறது.

"ஆசை அறுபது நாள்,
மோகம் முப்பது நாள்"

நண்பர்களே,  இனி நான் என்னதான் விளக்கி சொன்னாலும் மேலே குறிப்பிட்ட அந்த இரண்டு வரிகள் தான் முதல் மூலக்காரணங்கள். ஆனால் அது மட்டுமே காரணங்களும் இல்லை. சரி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.  கல்யாணத்திற்கு முன் கட்டை வண்டியில் மெதுவாக பயணம் செய்தவன், திடீர் என்று கனரக மோட்டார் வாகனத்தை அதிக சுமை ஏற்றி நெடுஞ்சாலையில் பயணம் செய்தல் எந்த அளவுக்கு பதற்றம் இருக்குமோ - அது தான் திருமண வாழ்க்கையிலும். இப்படி திடீர் என்று பாதை மாறி பயணிக்கும் சமயத்தில் நண்பர்களை மறப்பது ஒரு இயல்பான் விஷயம் தான். காரணம் அந்த சுகமான சுமை(மனைவி) இவனை மட்டுமே நம்பி தன் அணைத்து உறவுகளையும் உதறி விட்டு வருகிறாள். அப்படி வருபவளை சிறிது காலம் நிமிடம் கூட பிரியாமல் பார்த்து கொள்வது கணவனின் கடமை தானே. ஆயினும் நண்பர்களை மறப்பது தவறு தான். என்ன செய்வது மேலே குறிப்பிட்ட இரண்டு வரிகளும் திடீர் திடீர் என்று வந்து எட்டிப்பார்ப்பதால், நண்பர்கள் சுத்தமாக மறக்கப்படுகிறார்கள். 

இப்படி பாசத்தை பகிர்ந்துக்கொள்ள மூன்றாவதாக(குழந்தை) ஒருவர் வரும் பொழுது தான், இவர்களின் இடையே கொஞ்சம் இடைவெளி உருவாகும். அந்த இடைவெளியை மீண்டும் நிரப்ப இவன் தேடும் ஒரு உன்னதமான உறவு தான் நண்பன். 

நண்பர்களே,  ஆகையால் இந்த தற்காலிக பிரிவை நினைத்து வருத்தப்படாமல், அந்த பிரிவையும் ஒரு சுகமான சுமையாக மாற்றிக்கொள்பவன் தான் உண்மையான நண்பன். 

ஏனென்றால், கல்யாணத்திற்கு பின் உங்களால் நிச்சயம் உங்கள் நண்பர்கள் தனிமை படுத்தப்படுவார்கள்,
ஆகையால் நீங்கள் புரிந்துக்கொண்டால், உங்கள் நண்பர்களும் புரிந்துக்கொள்வார்கள் அல்லவா!!!

இதோ இந்த உன்னதமான உறவுக்காக என் சிறிய கவிதையோடு முடிக்கிறேன்,

 அம்மாவின் அரவணைப்போடு,
 அப்பாவின் அதட்டலோடு,
அக்காவின் பாசத்தோடு,
அண்ணாவின் துணையோடு,
தங்கையின் வருடலோடு,
தம்பியின் துணையோடு,
வளர்ந்தான் ஒரு அனாதை சிறுவன்,  
தன் நண்பனோடு!!!

5 comments:

  1. Very nice da... really touching... but how many of them will understand da?????

    There are lots of reason more than what u said da...

    But no one ready to justify to a friend for who misundestood..

    :( any how da.... :(

    ReplyDelete
  2. Bull shit...this is for people who dont how to maintain a balance in life.... Maturity comes into picture here... i agree its easy to say but veru difficult to maintain that balance... after all we have to learn these things in life.

    ReplyDelete
  3. நல்ல அலசல்... பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete
  4. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
    Follower ஆகி விட்டேன்… இனி தொடர்வேன்…

    இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/06/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

    ReplyDelete
  5. உங்கள் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்
    http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_29.html
    என் தளம்
    http://kovaimusaraladevi.blogspot.in/

    ReplyDelete